July 17, 2018
கோவையில் சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மக்கள் பாதுகாப்பு கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் DR. காமராஜ் நடேசன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர்
சாலை விளக்குகளை சரி செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது செய்திளார்களை சந்தித்த மக்கள் பாதுகாப்பு கட்சியின் தலைவர் டாக்டர் காமராஜ்,கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலை விளக்குகள் எரியாமல் உள்ளது.குறிப்பாக சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் சாலையில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் இருக்கிறது இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மேலும்,இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியிடம் மனு அளிக்க உள்ளதாகவும்,அதன்படியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியை வடக்கு தொகுதி மக்களுடன் மிகப்பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோவை வடக்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்று கூறினார்.