• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலைகளை செப்பனிட வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல்

February 16, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள பல்வேறு சாலைகளை உடனே செப்பனிட வலியுறுத்தி திமுகவினர் இன்று(பிப் 16) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

கோவை பீளமேடு,சவுரிபாளையம்,உடையாம்பாளையம்,நவ இந்தியா போன்ற பகுதிகளில் சாலைகள் அதிகளவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை செப்பனிட்டு தர மாநகாரட்சி ஆணையரும் , மாநகர பொறியாளர்களுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லாத காரணத்தால்,மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகளை உடனே செப்பனிட்டு தர வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து கோவை பீளமேடு பகுதியில் அவிநாசி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற இவர்களை,காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் படிக்க