• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமுதாய காவல் பணிக்கான பன்முனை பயிற்சி முகாம்

December 28, 2019

கோவை மாவட்ட காவல் துறை மற்றும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் இனைந்து நடத்திய சமுதாய காவல் பணிக்கான பன்முனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கோவை இரத்தின சபாபதி புரம் பகுதியில் உள்ள தனியார் உனவக அரங்கில் சமுதாய காவல் பணிக்கான பன்முனை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து பயிற்சி மாணவர்களுக்கு காவல்துறையின் நன்பண்புகள், மற்றும், காவல்துறையின் தியாகங்கள் பற்றி அனைவருக்கும் எடுத்து உரைத்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக காவல்துறையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்ற ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களின் சேவையினால் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தர இன்றளவும் தயக்கம் காட்டுகிற கிராமபுற மக்கள் அதிக அளவில் நமது கோவையிலும் இருப்பதாகவும், அப்படிபட்ட சூழலில் காவல்துறைக்கு மிகுந்த உதவியாக செயல்படுவது ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் தான் ஏனெனில் அவர்கள் மட்டும் தான் காவலர்களுக்கு காவலர்களாகவும், பொதுமக்களிடத்தில் பொதுமக்களாகவும் செயல்படுகின்றனர். அவர்களின் இத்தகைய செல்களை காவல்துறை சார்பிலும், அனைத்து காவலர்கள் சார்பிலும் பாராட்டத்தக்கது என பெருமை பட பேசினார். இதனை தொடந்த்து வருடத்தில் 365நாட்களில் 300 நாட்களுக்கும் மேலாக காவல் பணியில் தன்னை ஈடுபடுத்தி காவல்துறைக்கு உதவிகள் புரிந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவ படுத்த பட்டது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களுக்கு இந்த சான்றிதழ்களை கோவை மாவட்ட துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் வழங்கி சிறப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் செந்தில் குமார், சிந்தனை கவிஞர் என்றழைக்கப்படும் கவிதாசன், டாக்டர் மோனி, டாக்டர் தினேஷ் பெரியசாமி, மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியாளர் விநாயகமூர்த்தி மற்றும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க