May 31, 2019
தண்டோரா குழு
கோவையில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபர் கைது
கோவையில் சட்ட விரோதமாக பவளப்பாறைகளை கடத்தி பதுக்கிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை வனக்கோட்டம், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட கணபதி பகுதியில் பவளப்பாறைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனதுறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மேற்பார்வையில் WCCB மற்றும் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனப்பணியாளர்க் குழுவினர் கணபதியை அடுத்துள்ள மணியகாரன்பாளையம் பகுதியில் தணிக்கை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த சரவணன்ல்என்பவர் தனது வீட்டில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட பவளப்பாறைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.