• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்ற 5 பேரிடம் விசாரணை

December 18, 2019

கோவை கருமத்தம்பட்டியில் சட்டவிரோதமாக குழந்தையை விற்க முயன்றதாக மூன்று பெண்கள் உட்பட 5 பேரை பிடித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மதுக்கரையை சேர்ந்த புரோக்கர் ஜாகீர் என்பவருக்கு குழந்தையை விற்க கருமத்தம்பட்டி வந்த போது ஈரோட்டை சேர்ந்த புரோக்கர் ஹசீனா, கல்யாணி ஆகியோர் பிடிபட்டனர். குழந்தையை விற்க மதுரையில் இருந்து வந்த கண்ணன் ஜோதி என்ற தம்பதியையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை விற்பனை தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சூலூர் அருகே புரோக்கர்கள் ஹசீனா, கல்யாணி, ஜாகீர் ஆகியோர் சண்டையிட்டு கொண்ட போது பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை மீட்ட கருமத்தம்பட்டி போலீசார் குழந்தை விற்பனை குறித்து பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க