December 19, 2019
கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டி சட்ட கல்லூரி முன்பு வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் . டெல்லியில் மாணவர்கள் ஈடுபட்ட ஆர்ப்பாட்டத்தில் போலீசார் மாணவர்களை தாக்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பதாதைகளை கையில் ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 22 க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.