• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சங்க கால தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் ஒவியங்கள் !

August 7, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சுவர்களில் சங்க கால தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியிலுள்ள சுவர்களை அழகுபடுத்தும் வகையில் முதலாவதாக மத்திய மண்டல அலுவலக சுவற்றில் பண்டைய தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மண்பாண்டங்கள் செய்தல், தமிழ் பிராமி எழுத்துக்கள், இசைக்கருவிகள், கூடை பின்னுதல் போன்ற சங்க கால தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது.

இதே போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாநகராட்சி சுவர்களில் பல்வேறு வகையான பயனுள்ள ஓவியங்கள் மாநகராட்சியால் வரையப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க