• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற திருடனுக்கு தர்ம அடி

February 26, 2020

கோவை போத்தனூர் அடுத்த அண்ணாபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை, போத்தனூர் அடுத்த அண்ணாபுரத்தில் அருள் மிகு அக்னி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலின் உள்ளே இருந்து வெளியே குத்தித்துள்ளான். இதைப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பார்க்கவே, அவனை பிடித்து விசாரித்ததில், கோவில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் திருடனுக்கு தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்தனர். தனது பெயர் ஆசாத் என்றும், கோவையை சேர்ந்தவன் என்றும், கோவில் உண்டியலை திருட வந்ததாகவும் பொதுமக்களிடத்தில் அவன் கூறியுள்ளான். அதிகாலை 4 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தும் 3 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். தொடர்ந்து திருட வந்த நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு சென்றனர். திருட வந்த இவன் எக்ஸ்சல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளான். அந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க