• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோவில் உட்பட பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளித்த முஸ்லிம்கள்

April 8, 2020 தண்டோரா குழு

மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் விதமாக கோவை அத்தர் ஜமாத் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக கோவில் உட்பட பல்வேறு இடங்களில் கொரானா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

உலக முழுவதும் கொரனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அத்தர் ஜமாத் வெல்ஃபேர் அசோசியேஷன்கோவை மாநகர பகுதியில் உள்ள உக்கடம் கோதா, ஆபீஸ் பேட், சிஎம்சி காலனி, b1 காவல் நிலையம், ராமர் கோவில் பகுதி, ஒப்பணக்கார வீதி உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசல், கோட்டைமேடு, போன்ற இடங்களில் மத நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும் விதமாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீர் வினியோகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைவர் சையது உசேன் அவர்கள் தலைமையில் செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் சபீர், அத்தார் ஜமாத் பொருளாளர் ஆஷிக் அலி, துணைத்தலைவர் பீர்முகமது, கமிட்டி உறுப்பினர் ஆஷிக் அஹமத், சாதிக், அன்வர், அனிபா,உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் நகர முழுவதும் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க