• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு

January 22, 2018 தண்டோரா குழு

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி இன்று(ஜன 22)மனு அளித்தனர்.

கோவையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவிலின் வளாகத்தை ஒட்டியிலுள்ள மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக லட்சுமி நரசிம்மர் உருவத்தில் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலட்சுமி நரச்சிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலின் வளாகத்தை ஒட்டியே மாட்டிறைச்சி கடை செயல்பட்டு வருவதாகவும், இதனால் கோவில் பகுதியில் தூர்நாற்றம் வீசுவதாக கூறி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பாக ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வேடத்தில் வந்து, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மாட்டிறைச்சி கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர்.

மேலும் படிக்க