• Download mobile app
13 Jul 2025, SundayEdition - 3441
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கோலாகலமாக துவங்கியது 3வது ஜல்லிக்கட்டு போட்டி !

February 23, 2020 தண்டோரா குழு

கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின. இந்நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாடுகளும் இப்போட்டியில் களமிறங்கின.

காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க