• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

April 27, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு இடர்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு இடர்படி வழங்கிவருகின்றது. கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கும் இடர்படி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி தூய்மைபணியாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்ரம் செய்ய வேண்டும் எனவும்,அரசு பணியாளர்களுக்கு இடர் படி வழங்கப்படுவதை போல தூய்மை பணியாளர்களுக்கும் இடர் படி வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க