• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் பொருந்திய பேருந்து அறிமுகம்

May 17, 2021 தண்டோரா குழு

கொரோனோ நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில்,ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய இரு பேருந்துகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.

கோவையில் நாளுக்கு நாள் அவற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் சிகிச்சை பெறுவதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்வாறு படுக்கைக்காக,ஆக்சிஜன் இல்லாமல் அரசு மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் நோயாளிகளுக்காக, கே.ஜி.ஐ. எஸ்.எல் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைந்து ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இரு பேருந்துகளை கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது.

பேருந்துக்கு 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இந்த பேருந்துகளில் ஆக்சிஜன் அளவு குறையும் போது சேவா கேசஸ் நிறுவனம் அவ்வப்போது ஆக்சிஜன் நிரப்பி தருவதாக கூறியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

மேலும் படிக்க