• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் !

May 20, 2021 தண்டோரா குழு

கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிறப்பு வார்டுகளை ஆய்வு மேற்கொண்டார்.கோவை கொடிசியா வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.மேலும்,மற்றொரு ஏ ஹாலில் 220 படுக்கைகள் சித்தா மருத்துவ சிகிச்சைக்கு தயார் நிலையில் உள்ளது.அதையும் ஆய்வு மேற்கொண்டவர், சிகிச்சைகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ஏற்கனவே,கொடிசியா வளாகத்தில் உள்ள 4 ஹாலில் டி மற்றும் இ ஹாலில் 1280 ல் 701 நிரப்பப்பட்டு 579 காலியாக உள்ள நிலையில், இது கொரோனா நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமைய உள்ளது.மேலும், அங்கு, கிராமத்து பால் நிறுவனம் சார்பில், கொரோனா நோயாளிகள் 50 ஆயிரம் பேர் வீதம் 15 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் லிட்டர் பால்லை அந்நிறுவனம் வழங்க உள்ளது. அந்த பாலை தமிழக முதல்வர் பார்வையிட்டு, அதன் நிறுவனர் ஜனார்த்தனிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க