கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 127 பேரில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் – நேற்று ஒரே நாளில் 12 பேர் வீடு திரும்பினர்.
கோவையில் கொரோனா நோய்த்தொற்று உடன் சிகிச்சை பெற்று வந்த 12 நபர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் பாதிப்புடன் 127 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் மருத்துவர், 10 மாத குழந்தை உள்ளிட்ட 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்றிரவு புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரொனா பாதித்த 12 பேர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைதட்டி ,பாராட்டி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு குணமடைந்து அதற்கான பரிசோதனை நகலையும் கொடுத்து அனுப்பினர். மேலும் வருங்காலங்களில் 28 நாள் அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறும் பொது இடங்களில் அதிகமாக செல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கி மருத்துவர்களும் அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தனர். கொரோனா நோய்த்தொற்றில் தொடர்ந்து குணமடையும் எண்ணிக்கை கூடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்று பீதி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை ஈ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 127 பேரில் 26 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் 101 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு வீடு திரும்புபாவர்கள் என் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !