• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொத்தடிமைகளாக தவித்து வரும் குடும்பம்

April 11, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பம் கொத்தடிமைகளாக மாட்டி தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்.இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அவசர தேவைக்காக அட்வான்ஸ் வாங்கிகொண்டு ஸ்பின்னிங் மில்லில் பணியில் இணைந்தனர்.கணவன் மனைவி இருவரும் கடந்த ஐந்து மாதமாக ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் வேலை செய்து வருகின்றனர்.

ஆனால்,கடந்த ஒரு மாதமாக மில் முதலாளி அப்பாஸ் மகாலிங்கத்திடம் பணம் திரும்ப கேட்டு கடுமையாக நடந்து வருகிறார்.இதனால் மகாலிங்கம் நாங்கள் இந்த இடத்தில் இருந்து வேறு பக்கம் வேலைக்கு செல்கிறோம்.இந்த ஊரிலேயே உள்ள வேறு இடத்தில் வேலை செய்து உங்கள் பணத்தை கொடுத்துவிடுகிறோம் எனக் கூறியிள்ளார்.இதனால் இன்னும் கோவம் அடைந்த முதலாளி அப்பாஸ் நீங்கள் எங்கு வேணாலும் போங்கள் ஆனால் உங்கள் குழந்தைகளை பணம் கொடுக்கும் வரை வெளியில் விடமாட்டேன் என மறுத்துள்ளனர்.

இதனால்,மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி இவரது குழந்தைகள் கடந்த ஒரு சில மாதங்களாக இவர்கள் பணிபுரியும் ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் குடும்பத்தோடு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க