• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொடி தயாரிக்கும் பணி மும்முரம்

January 24, 2020

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி தேசியக் கொடி தயாரிக்கும் பணி கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணி கோவையில் உள்ள காந்திஜி கதர் ஸ்டோர்ஸ் கடையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகை மதுரை,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து கொடி தயாரித்து அனுப்பபடுகின்றன. இதற்காக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருந்து கதர் துணிகள் வரவழைக்கப்பட்டு இக்கொடிகள் தயார் செய்யப்படுகின்றன. இக்கொடிகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும்
அனுப்பபடுகின்றன. கேரளாவில் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பபடுகின்றன. இதில் 30 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டு பெரிய கொடிகளும், 10 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டு சிறிய கொடிகளும் தயாரிக்கப்படுகின்றன. பெரிய கொடிகளில் 42 இன்ச்சில் அசோக சக்கரம் பொறிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்கும் பொருட்டு காட்டன்,கதர்,வெல்வட் துணிகளில் இக் கொடிகள் தாயார் செய்யப்படுகின்றன.

குடியரசு தினத்தை ஓட்டி சுமார் ஒன்றரை லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பபடுகின்றன.

கொடி தயாரிக்கும் பணி குறித்து பேட்டியளித்த பணியாளர் ராஜேந்திரன்,

பொதுவாக அரசியல் கட்சிகளுக்கும் அமைப்பினருக்கும் பல்வேறு கொடிகள் நாங்கள் தயார் செய்து கொடுத்தாலும் தேசியக்கொடி தயாரிக்கும்போது மட்டும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தினத்தையொட்டி இரவு பகல் பாராமல் தொடர்ந்து கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுவாக குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதிகமான கொடிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க