கோவை பூங்கா நகரில் குப்பையை எடுக்கச்சொன்னால் குப்பைதொட்டியையே மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்பு கடை பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பூங்கா நகர் ,கரும்பு கடை முக்கிய சாலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் ஊழியர்கள் வருவதில்லை. குறைவான ஊழியர்களால் முழுமையாக தூய்மை பணி செய்ய முடியவில்லை என அதிகாரிகள் விளக்கமளிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் குப்பை எடுக்க சொன்ன பகுதியில் குப்பைகளை எடுத்து விட்டு , தொட்டியையும் எடுத்துச்சென்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நொய்யல் ஆற்று கரையில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா