• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

January 17, 2020 தண்டோரா குழு

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கைவிட கோரியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில் செல்வபுரம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தேசிய கொடிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மத்திய, மாநில
அரசுகளை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.

சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க