• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஒரு நாள் அடையாள நோன்பு

January 23, 2020

கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஒரு நாள் அடையாள நோன்பு மேற்கொண்டனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பாக மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பில் வடகோவை பகுதியில் உள்ள ஐதர்லி திப்பு சுல்தான் பள்ளி வாசலில் ஒரு நாள் அடையாள நோன்பு மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பிருந்து தொழுகை மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இஸ்லாமிய மக்கள் விரதம் இருந்து இன்று ஒருநாள் அடையாள நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நோன்பிருந்த இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதையடுத்து, சரியாக மாலை 6 மணிக்கு நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நோன்பு மேற்கொண்டவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதையொட்டி, இந்நிகழ்ச்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க