• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடியரசு தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம்

January 26, 2022 தண்டோரா குழு

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தியை புறக்கணிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊர்தியில் இடம்பெற்றுள்ள வ.உ.சி வேலு நாச்சியார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தேசிய அளவில் பார்க்கும் பொழுது பல மக்களுக்கு அவர்களை யார் என தெரியாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அணிவகுப்பு குழுவிடம் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், வேலு நாச்சியார், நாராயண குரு ஆகியோரின் புகைப்படங்களையும் கண்டனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து தமிழக அரசு ஊர்தி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்பு செய்த தமிழக முதலைமைச்சருக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையினர் நன்றிகளை தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விபி கோவிந்தராஜ் மற்றும் திராவிட தமிழர் கட்சி வென்மணி,திவிக நெருதாஸ் ,ஆடிட்டர் ரகுபதி,வீரபாண்டி பாபு,ஈரோடு சரவணன் சண்முகவேல்,பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க