• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தியதற்க்காக போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்

September 22, 2021 தண்டோரா குழு

கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தியதற்க்காக போடப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சார்பில் தற்போது உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அதே போல கோவையில் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்கு அப்போதைய அதிமுக கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய திமுக நிர்வாகிகள் மீது அப்போதைய அதிமுக அரசு வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு கோவை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் ஆஜராகினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் கணேஷ்குமார்,

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் மக்களுக்காக போராட்டப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும்,தொடர்ந்து மக்களுக்காகா தமிழக முதலமைச்சர் வழியில் செயல்படுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க