• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுகவினர் ரயில் மறியல்

April 2, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திமுகவினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று(ஏப் 2)ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில்,உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து  சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தினால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.மேலும்,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க