• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுகவினர் ரயில் மறியல்

April 2, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திமுகவினர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று(ஏப் 2)ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில்,உள்ள ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து  சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தினால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.மேலும்,காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க