• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து : பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசம்

August 18, 2018 தண்டோரா குழு

கோவையில் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்தில், பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

கோவை விளாங்குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ கேரேஜ் செயல்பட்டு வருகிறது. கார்களை சர்வீஸ் செய்யும் இந்த கடையில் வழக்கம்போல ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள் அங்கு செல்வதற்குள் திடீரென தீ வேகமாக பரவி அருகில் உள்ள கார்கள் மீதும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பவம் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை செய்தனர்.சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கார்களில் உள்ள பேட்டரியில் இருந்து ஏதேனும் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

மேலும் படிக்க