• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த வாலிபர் கைது

January 28, 2020

கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணுக்கும் ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த்து. இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும்,சமூக வளைதளங்களிலும் பகிர்வதாக மிரட்டியதோடு, அந்த பெண்ணின் சகோதரியின் கைப்பேசிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.அதன்பேரில் ரூபனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ரூபன் ஆபாச படங்களை பகிர்ந்த்து உறுதி செய்யப்பபட்டது.இதனையடுத்து ரூபன் மீது தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்பட இரு பிரிவுளின் வழக்குபதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையலடைத்தனர்.

மேலும் படிக்க