• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில், காட்டு யானையை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறைக்கு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை

November 21, 2018 தண்டோரா குழு

கோவையில் விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து சென்னையில் உள்ள வனஉயிரின காப்பாளருக்கு கடிதம் அனுப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், கோவையில் வரப்பாளையம், பன்னிமடை, பெரிய தடாகம், சின்னதடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக காட்டு யானை ஒன்று விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை தக்காளி, சோளம், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்கள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கபட்டுகின்ற்னர். இந்த யானையை அடர்ந்த வன பகுதிக்கு அனுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை.

இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக சாடிவயலில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விரட்டும் முயற்சி நடக்கிறது. இது குறித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் யானையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் யானையை இடமாற்றம் செய்யவும் மனுக்கள் அளித்தனர். எனவே விவசாயிகளின் பயிர்களையும், மனித உயிரிழப்பை ஏற்படுத்தும் காட்டு யானையை முதுமலை காட்டு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க