• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு

May 22, 2018 தண்டோரா குழு

தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் கோவையில் உள்ள நீர்நிலைகளிலும்,கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரிலும் கலப்பதை தடுக்க கோரி,கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் இன்று(மே 22)மனு அளித்தனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரில்,தோல் தொழிற்சாலை கழிவுகள்,நகராட்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கலப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கழிவுநீர் கலப்பால்,இந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு புற்று நோய் மற்றும் தோல் நோய்கள் வருவதால் அதிகளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி,கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும்,எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவித்தனர்.உடனடியாக அதிக பாதிப்புகள் வரும் நீர்நிலைகளில் முன்னதாக கழிவுகள் கொட்டுவதையும்,கலப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் படிக்க