• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டம் துவக்கம்

March 9, 2020 தண்டோரா குழு

கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் துவக்கிவைத்தார்.

கோவை அவினாசி சாலையில் புதியதாக அமைக்கபட்டுள்ள அரிமா வேக்பீல்டில் கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி முன்னிலையில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் துவக்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

இந்த புதிய குடியிருப்பிற்கு வந்துள்ளவர்கள் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குப்பைகளை தரம்பிரித்து கொடுத்தல் மூலம் தங்களது பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதுடன், நமது நகரத்தையும் தூய்மையாக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும். புதிய குடியிருப்பு வாசிகள் தற்போது இருந்தே தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு மாநகரம் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கு. ராஜாமணி பேசும் போது,

கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சனைகளை அறிந்து பிரச்சனைகளைக் களைய கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவற்றோடு கட்டுமானத் துறையில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட்டில் துறையில் உள்ளவர்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும். சுற்றுச்சூழல், இயற்கை சூழல் ஆகியவற்றை பேணி பாதுகாக்கவும், மாசு இல்லாத கோவை நகரத்தை உருவாக்கிடவும் பொதுமக்கள் உள்ளிட்ட எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அரிமா கன்ஸ்ட்ரக்சன் மற்றும் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் குமார் கூறுகையில்,

சுற்றுச் சூழலுக்கும், சமுதாயத்திற்கும் உண்மையாகவும், நிலையான வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளுடனும் அரிமா நிறுவனம் இவற்றை உருவாக்கியுள்ளன. கழிவு மேலாண்மைக்காக டிடபிள்யுஎம்எஸ் என்ற அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் படி பிரித்துக் கொடுத்த கழிவுகளை இந்நிறுவனம் மறுசுழற்சிக்கு எடுத்துச்செல்லும். கழிவுகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து அனுப்பும் திட்டத்தை முதல் நாள் முதல் செயல்படுத்தும் முதல் அடுக்குமாடி குடியிருப்பாக அரிமா வேக்பீல்டு திகழ்கிறது. மழை நீரை சேகரித்து, பூமிக்குள் செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க