• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் களை கட்டிய நிலாச்சோறு திருவிழா

January 28, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் பாரம்பரியமிக்க பல்வேறு விழாக்களை பலரும் மறந்து வரும் நிலையில்,கோவை ஆவரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் மற்றும் மனமகிழ் மன்றம் எனும் அமைப்பை உருவாக்கி , தமிழர் பாரம்பரிய பண்டிகைகளை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர் இதில் வருடந்தோறும் கொண்டாடி வரும் நிலாச்சோறு விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி,தைப்பூசத்துக்கு 7 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு விழாவை கொண்டாடி வருகின்றனர்..

அதன் படி நடைபெற்ற நிலாச்சோறு விழாவில்,சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த நித்யாராணி கூறுகையில்,

இது போன்ற விழாக்களை பலரும் மறந்து வருவதாகவும்,இது போன்ற விழாக்களை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இதில் குழுந்தைகளும் கலந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க