• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்விக் கட்டணத்தை முறையாக்க கோரி கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

February 3, 2018 தண்டோரா குழு

கோவையில் கல்விக் கட்டணத்தை  முறையாக்க கோரி கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே,தனியார் பள்ளிகளின் சுரண்டலை தடுத்து கல்விக் கட்டணத்தை  முறையாக்க கோரி  கல்விக்கான தேசிய கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது தனியார் பள்ளி மூலம் சுரண்டலை தடுத்து நிறுத்தி,சட்டவிரோத கட்டணத்தை வாங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி கட்டணம் மற்றும் தரம் குறித்த  மாநில மற்றும் மத்திய சட்டங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர்.

பள்ளி வளாகத்திலும் போக்குவரத்தின் போதும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், பள்ளிகளின்  நிதி மற்றும் பாதுகாப்பு தணிக்கை செய்யவும், RTE சட்டம் 2009 இல் மேற்கண்டவை குறித்து திருத்தம் செய்து வெளியிட கோரிக்கை விடுத்தனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உள் கட்டமைப்பை மேம்படுத்தி , கல்வியின் தரத்தை உயர்த்த வழிவகை செய்யவும், பள்ளி நிர்வாக குழு எனப்படும் SMC யில் 100% பெற்றோர் பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும், கடமைகளை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக  உரிய நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர்.

 

 

மேலும் படிக்க