• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

January 30, 2020

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு எல்.எஸ்.டி எனும் போதை மருந்து மற்றும் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எல்.எஸ்.டி எனும் போதைப்பொருள் தடவிய 5 அட்டை வில்லைகள் மற்றும் ஒன்றரை கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து போதைப்பொருள்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த ராஜேஸ் மற்றும் திருவள்ளுரை சேர்ந்த பிராங்கிளின் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க