• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கருணை கொலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 31, 2018 தண்டோரா குழு

கந்தசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அருண்குமார் மற்றும் திமுக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அபகரித்து விட்டதாகவும், எனவே சொத்தை மீட்டு தர வேண்டும் இல்லையெனில் கருணை கொலை செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான இடம் கோவையில் உள்ள அரசூர் பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 5 கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அருண் குமார் மற்றும் திமுக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து பத்திரத்தை போலியாக பதிவுசெய்து விற்பனை விட்டதாகவும் மேலும் பல்வேறு வகையில் போராடி தனது பூர்வீக சொத்தை மீட்க முடியவில்லை என்பதால் தன்னை கருணை கொலை செய்யும் படி கந்தசாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். உடனடியாக தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

மேலும் படிக்க