• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கண்டெய்னர் லாரியில் 250 வட மாநில தொழிலாளர்கள் – 5 லாரி ஓட்டுநர்கள் கைது

April 1, 2020 தண்டோரா குழு

கோவையில் இருந்து கண்டெய்னர் லாரியில் 250 வட மாநில தொழிலாளர்களை மறைத்து வைத்து ஏற்றி சென்ற 5 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர் ஏஜி புதூர் பைபாஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 5 கண்டைனர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வீதி கொரானா பீதி காரணமாக தர்மாகோல் லாரியில் 250 ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களை லாரியில் மறைத்து வைத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.

197 பேர் 3 கண்டெய்னரில் ராஜஸ்தான் மாநிலத்திற்கும், 53 பேரை 2 கண்டெய்னரில் மத்திய பிரதேச மாநிலத்திற்கும் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் டெல்லியை சேர்ந்த ராஜேந்திர சிங் வயது (40) பல்ராம் 3(8) உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இந்திர பால் சிங் (28) டெல்லியை சேர்ந்த அணில் குமார் (28)உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் பாட்டியா (32) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக கூடுதல், நோய் தொற்றை பரப்புதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 5 லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க