• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கணவரை துவம்சம் பண்ணிய மனைவி;அறிவுரை வழங்கி அனுப்பி வைத்த காவல்துறை

July 19, 2018 தண்டோரா குழு

கோவையில் மற்ற பெண்களுடன் உள்ள தொடர்பை மறைத்து திருமணம் செய்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனை பட்டப்பகலில் மக்கள் செல்லும் சாலையில் அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இவர்கள்,கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் தரிசனத்திற்காக இவர்கள் கோவை சாய்பாபா கோவிலுக்கு வந்துள்ளனர்.அப்போது,கணவர் கையில் மற்றொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருந்ததையும் திருமணமாகி குழந்தை இருந்ததை மறைத்து,திருமணம் செய்துக்கொண்டதை அறிந்து அந்த நபரின் மனைவி, அவரை கோவிலின் நுழைவாயிலில் வைத்தே சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,இருவரையும் சமாதானம் செய்து,சந்தேகமிருந்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுக அந்த பெண்ணிடம் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

சாய்பாபா கோவிலுக்கு தம்பதியினர் இருவரும் தரிசனத்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அந்த வழியாக வந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க