• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் கடைத்தெருக்களில் பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

July 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்காத வகையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரிசோதனைகள், வீடுகள்தோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள், இருப்பை பொறுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள், உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.இதையடுத்து கோவையில் பிரதான வீதிகளில் உள்ள பெரிய அளவிலான துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.இதனால் துணிக்கடைகள், நகைக்கடைகளில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவைக்கு மீண்டும் வந்துள்ளனர்.

மேலும் கடைவீதிகளில் பல்வேறு கடைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களும் பணிக்கு வரத் துவங்கி விட்டனர்.இதையடுத்து இதுபோன்ற துணிக்கடைகள்,நகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

இதனை அடுத்து கோவை கிராஸ்கட் சாலையில் பிரதான துணிக்கடைகள்,நகைக்கடைகள் மற்றும் அங்கு 6,7,9 மற்றும் 11-வது வீதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாநகராட்சி சுகாதார துறையினர் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவோரால் கொரோனாப்தொற்று பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல் கோவையின் புறநகர் பகுதிகளில் இருந்து வருவோருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது, ‘என்றார்.

மேலும் படிக்க