• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடுமையாகும் ஊரடங்கு உத்தரவு….

April 12, 2020 தண்டோரா குழு

கோவை மாநகரின் உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் 30 நிமிடங்கள் முழுமையாக மூடப்பட்டு பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் கொரோனா தடுக்க ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளது.மேலும் வரும் நாட்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 144 தடை உள்ள நிலையில் தேவையின்றி சாலையில் வருவோரை போலீஸார் எச்சரித்து வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இன்று காலை முதல் உக்கடம், ஆத்துப்பாலம், உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் காலை 9.00 லிருந்து 9.30 வரை மற்றும் 11.30 லிருந்து 12.00 வரை சாலைகள் முழுமையாக மூடப்பட்டு தடை மீறி வருவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.

அதைப்போல் மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் இதே போன்று தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க