• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடந்த 2 மாதங்களில் 1378 வழக்குகள் பதிவு – 1516 குற்றவாளிகள் கைது – கோவை எஸ்.பி பேட்டி !

May 27, 2022 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி.பத்ரிநாராயணன் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணனிடம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர் கூறியதாவது :

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு. சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில். 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.17,12,830/- மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.20,55,006/ மதிப்புள்ள 2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க