January 11, 2020
தண்டோரா குழு
கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ஓவியச்சந்தை கண்காட்சியை காண பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
கோவை விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இன்று ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் சாலையில் ஓவியச்சந்தை என்ற பெயரில் ஓவியம் மற்றும் கலை பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில் கோவை மற்றும் சுற்றுவட்டார கலைஞர்கள் 140 பேரின் ஓவியங்கள் மற்றும் கலை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஓவியர்கள் வாழ்வாதாரத்தை பெறுவார்கள் என்றும், மக்கள் மத்தியிலும் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும் ஓவியச்சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.