• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நேரத்தில் 14 போர் விமானங்கள் அணி வகுப்பு !

October 16, 2021 தண்டோரா குழு

முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் அணிவகுத்துச் சென்றது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மற்றும் தேஜஸ் விமானங்கள் அவ்வப்போது விமானப்படை அதிகாரிகள் கொண்டு பயிற்சி எடுப்பது வழக்கம். இந்நிலையில் 14 தேஜஸ் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சூலூர் விமானப்படை தளத்தில் மேலே பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டது. மேலும் 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பது இதுவே முதல் முறையாகும்.

சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதால் இந்தியா போர் விமானங்களை தயார் நிலையில் வைக்க தற்பொழுது பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பான இந்த தேஜஸ் விமானம் வேகமாகவும், திடீரென பக்காவாட்டிலும், மேலும் கீழுமாகவும் சுழன்று கூடியது.

இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் ஒத்துழைப்பால் தற்போது இந்த சாகசமும் சாத்தியமாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க