• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு !

April 24, 2020 தண்டோரா குழு

கோவை மாநகரில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 537 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.அன்னூர் காவல் நிலைய பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 போலீசாருக்கும், ஒரு ஆயுதப் படைக் காவலருக்கும், குனியமுத்தூர் காவல் நிலைய காவலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை சார்பில், சீல் வைக்கப்பட்ட பகுதியில் அவர்கள் பணியாற்றியதால் அதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 நபர்களில் 4 நபர்கள் கோவை போத்தனூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போத்தனூர் காவல்நிலையத்தை மூடவும், தற்காலிகமாக ஒரு சில நாட்களுக்கு மண்டபத்தில் இயங்கவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு பணியாற்றியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பாதுகாப்பு கருதி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உணவகம் மூடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க