• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டுள்ளனர் – நா.கார்த்திக்

January 19, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் 100 மக்கள் சபை கூட்டங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுகவை நிராகரித்து கையெழுத்து இட்டுள்ளதாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா கார்த்திக் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதல் தி.மு.க.சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் சபை கூட்டங்களில் சுமார் 1கோடியே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 508 பேர் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டு உள்ளதாகவும் கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 100 மக்கள் சபை கூட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் அதிமுகவை நிராகரித்து கையெழுத்திட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், கோவை சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை கருதி மழையினால் வீடுகளிலிருந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டி நாளை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க