• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஏர்செல் அலுவலகம் முன்பாக வாடிக்கையாளர்கள் போராட்டம்

February 21, 2018 தண்டோரா குழு

ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கிடைக்கவில்லை என்று கூறி தமிழகம் முழுவதும அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர்செல் தொலைத்தொடர்பு சேவையில் சிக்கல் இருப்பதாகவும், தொடர்பு கொள்வதில் பிரச்னை உள்ளதாகவும் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏர்செல் நெட்வொர்க் இயங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதற்கு, ஏர்செல் நிறுவனத்தின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை,ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏர்செல் சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சேவை மையத்துக்குச் சென்று ஊழியர்களிடம் விளக்கம் கேட்டனர். ஏர்செல்லின் சேவைக் குறைபாட்டால் தங்களின் வணிகம் முடங்கியுள்ளதாகவும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறைகூறினர். செல்பேசி சேவை கிடைக்காததற்கான காரணம் பற்றித் தங்களுக்கே நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும், 3நாட்களுக்குப் பொறுத்திருக்குமாறும் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏர்செல் செல்போன் இணைப்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.

 

மேலும் படிக்க