June 5, 2019
தண்டோரா குழு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக இன்று 05-04-2019 கோவை கரும்புக்க்டை பொருட்காட்சி பாப்புலர் பார்க் லேஅவுட் மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்த சிறப்பு தொழுகைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் மாவட்டத் தலைவர் முஹம்மது சமீர் உரையாற்றினார்.இதில்உலக அமைதியையும், மனிதர்களிடையே சகோதரத்துவம் – சமத்துவம் –மனிதநேயம் திழைத்திடவும் , தற்போது நாட்டில் சிறுப்பான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிழவும் அச்ச உணர்வு நீங்கி மக்கள் புரிந்துணர்வுடன், சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்தனர்.
தொழுகையின் இறுதியில் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியினை பரிமாறி கொண்டனர். அதே போல் ஏழைகள் ரமலான் பண்டிகையை ஏழைகளும் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகைக்கு முன்னர் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட கிளைகள் சார்பாக அரிசி, என்னை, நெய், காய்கறிகள் போன்ற உணவு பொருட்கள் 500 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.