• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எல்.இ.டி விளக்குகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு

October 12, 2018 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தெரு விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி விளக்குகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.

கோவையில் 70/250 வாட்ஸ் வரையிலான சோடியம் விளக்குகள், 40 வாட்ஸ் சி.எப்.எல்., மற்றும் டி 5 என 70 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் உள்ளன. இதனால் வருடத்துக்கு 19 கோடி ரூபாய் மின் கட்டணமும், பராமரிப்புக்காக 6 கோடி செலவாகிறது. இந்த செலவுகளை குறைக்கவும் மின்சாரத்தை சேமிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

எல்.இ.டி.,விளக்குகள் பொருத்தப்பட்டால் 47.81 சதவீதம் வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இந்த மதிப்பீடு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு மாநகராட்சி அனுப்பி வைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் மாநகராட்சிப்பகுதியான 60 வார்டுகள் மற்றும் விரிவாக்கப்பகுதியில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 56 ஆயிரத்து 984 எல்.இ.டி., விளக்குகளைப் பொருத்த 74 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு விளக்குகள் மாற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க