• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்த வாக்குப்பதிவு – ஆட்சியர் தகவல்

February 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 169 பதட்டமான வாக்குச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் கண்காணிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் ஆட்சியர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் உள்ள 1,290 வாக்குச்சாவடிகளில், 169 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்பட்டு நேரலை மூலமாக கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டோம்.எந்த வாக்குச்சாவடிகளிலும் பத்தற்றமான சூழ்நிலைகளோ,பிரச்சனைகளோ எதுவும் இல்லை. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கோவையில் வாக்குப்பதிவு நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க