• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊரக பகுதியில் குறைந்தது கொரோனா – 3030 படுக்கைகளில் 59 பேர் மட்டுமே சிகிச்சை

June 12, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா நோய்த் தொற்று குறைந்து கொண்டே வருகிறது.

இதனிடையே மாவட்டத்தில் ஊரடக பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து காணப்பட்ட போது 228 கிராம ஊராட்சிகளில் 3ஆயிரத்து 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.இதில் பலரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொற்று குறைந்ததின் காரணமாக தற்போது இதில் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 241 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு 3030 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இதில் பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 7 பேரும், சூலூர் வட்டாரத்தில் 51 பேரும், மதுக்கரை வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வசதி இல்லாதவர்கள் மட்டுமே இந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 2971 படுக்கைகள் காலியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க