May 30, 2018
தண்டோரா குழு
மத்திய அரசு அறிவித்த 2% ஊதிய உயர்வை கண்டித்து கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள பரோடா வங்கியின் முன் இருநூறுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின் தொடக்கமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 5 ஆம் தேதி நடந்த வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கூட்டத்தில் மத்திய அரசு 2% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.2% ஊதிய உயர்வை கண்டித்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்திய அரசையும்,இந்திய வங்கிகளின் சங்கத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும்,வங்கியிலுள்ள வார கடன்களை வசூலிக்கவும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது எனவும் வங்கிகளின் சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் போராடி வருவதாக தெரிவித்தனர்.
வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உயர்த்த மத்திய அரசு முன்வர வேண்டும் இல்லையென்றால் நீண்ட நெடிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டத்தில் 460 வங்கிகளும் 1200 ஏ டி எம் மையங்கள் இரண்டு நாளைக்கு செயல்படாது எனவும்,இதனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கோவை மாவட்ட வங்கிகளின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜன் தெரிவித்தார்.