• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

May 31, 2022 தண்டோரா குழு

பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணிக்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அருணா முன்னிலை வகித்தார்.மேலும் திட்ட அலுவலர் விஜயகுமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் சரண்யா தேவி, சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன், உளவியலாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பந்தய சாலை துணை இயக்குநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மேலும் படிக்க