• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உருவாகிவரும் எசபெல்லா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

May 9, 2022 தண்டோரா குழு

தமிழ் சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளம் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா கோவையில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில், உருவாகி இளம் கலைஞர்கள் சேர்ந்து பணியாற்றி வரும் எசபெல்லா எனும், சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றிப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ,
பிரபல நடிகர் நிழல்கள் ரவி,இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது.இதில்,படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ள கோவையை சேர்ந்த விவாகி,தயாரிப்பாளர் பஞ்சாப் தமிழன் டோனி சிங்,மற்றும் நடிகர்கள் நிழல்கள் ரவி,ரமேஷ் கண்ணா ஆகியோர் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு பேசினர்.

அப்போது பேசிய நிழல்கள் ரவி,

முழுக்க கோவையை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்கும் இந்த படத்தில்,கோவையை சேர்ந்த தாமும் நடிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய ரமேஷ் கண்ணா,வித்தியாசமான கதைக்களத்தில் எசபெல்லா உருவாகி வருவதாகவும், தமிழ் சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளம் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் தயாரிப்பாளரும்,இதில் முக்கிய ரோலில் நடித்து வரும், பஞ்சாப் தமிழன் டோனி சிங் கூறுகையில்,

இளம் இயக்குனர் வராகியின் முதல் படத்தில் தாம் நடித்த போது அவரின் திறமையை பார்த்து வியந்து,தாம் படத்தை தயாரிப்பதாக தெரிவித்தார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில் உருவாகி வரும் இசபெல்லா திரைப்படத்தை தொடர்ந்து, இதே தயாரிப்பில் இரண்டாவது படமாக, ஒரு விரல் புரட்சி எனும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க