• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

June 20, 2020 தண்டோரா குழு

இந்திய சீன எல்லையில் சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் சார்பில் கோவையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சீன ராணுவத்தை கண்டித்தும், இந்திய வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிறுவனர் தலைவர் அன்புமாரி ஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டியிட்டு ராணுவ வீரர்களுக்கு தங்கள் மரியாதையை சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் செலுத்தினர்.

மேலும் சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவத்தினரின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பினர். நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் முத்துராஜ் தலைமையில்,கோவை மாவட்ட பொதுச் செயலாளர் புல்லட் சேகர் ஜி, கோவை மாவட்ட தலைவர் காளிதாஸ், கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் ,மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க